Monday 9 December 2013

அருவிகளில் முதன்மையானதாகத் திகழும் குற்றாலம்!


மந்தி சிந்தும் கனிகளுக்கு,வான்கவிகள் கொஞ்சும்.   மந்திகள் தின்று கீழே போடும் கனிகள் நமக்கு கிடைக்காதா? என்று கவிகள் ஏங்குவார்கள் என குற்றாலத்தின் சிறப்புகளை ஒரே வரியில் சொல்லிவிட்டார் திரிகூடராசப்பக்கவிராயர். அப்படிப்பட்ட குற்றாலத்தில் மெயின் அருவி,ஐந்து பக்கங்ளிலும் கொட்டும் ஜந்தருவி,புலி அருவி,சிற்றருவி,பழையகுற்றால அருவி,செண்பகாதேவி அருவி,தேனருவி என ஏழுவகையான அருவிகள் ஒரே குற்றாலம் மலையிலிருந்து கொட்டும் அருவிகளின் அதிசயத்தை உலகில் வேறு எங்கும் காணமுடியாதபடி இயற்கை அன்னை பெருங்கொடையாக நெல்லை மாவட்டத்தின் தென்மேற்குத் தொடர்ச்சி மலையின் பக்கம் கொடுத்திருக்கிறார்.
                  சிறப்பு சேர்ப்பு இதோடு நின்று விடவில்லை. பல அரிய பெரிய வைத்திய குணங்களை இந்த மலையருவிகளும் மலையில் படர்ந்திருக்கும் மூலிகைகளும் கொண்டிருப்பதை உறுதிசெய்கிறார். 1947 களில் குற்றாலம் மலையை ஆய்வு செய்த வெள்ளைக்கார டாக்டரான ஒயிட் என்பவர்.
 1008 வகையான மூலிகைகளைக் கொண்ட குற்றாலம் சமய சஞ்சீவி என்கிறார் டாக்டர் ஒயிட்.  அதோடு பல் வேறு வகையான பழங்களும் விளையக் கூடிய அற்புதமான  மலை என்கிறார் அந்த பிரிட்டிஷ்காரர்.
கேரளாவின் வான்மழையான தென்மேற்கு பருவக்காற்று துவங்கும் மே மாதம் முதல் ஆகஸ்ட்டின் மத்திய நாட்கள் வரையிலும் அதன் எதிராலியாய் அண்டைப்பகுதியான குற்றாலத்தில் மலையில் சாரல் பொழிந்து அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டத் தொடங்கிவிடும்.
                  சுமார் மூன்றரை மாதங்கள் வரை நீடிக்கும் சாரல் மழை சீசனில் மலையில் உள்ள மூலிகைச் செடிகள் உயிர்பெற்று துளிர்த்துவிடும். அந்த மூலிகைச் செடிகளின் வழியே வழிந்தோடி அருவியாய் கொட்டும் தண்ணீரில் குளித்தால் சரும நோய்கள் தீருவதோடு தலைவலியும் குணமாகும் தன்மைகொண்டது.
 File:குற்றாலம், திருநெல்வேலி.jpg
                    ஒருசமயம் இங்கே கோவிலாய் குடிகொண்டிருக்கும் சிவபெருமானான குற்றால நாதருக்கு கடுமையான தலைவலி கண்டதாம். அப்போது அவரை தரிசிக்க வந்த அகத்திய முனிவர் மூலிகை குணங்களைக் கொண்ட குற்றால அருவி நீரை அபிஷேகம் செய்ய தலைவலி தீர்ந்ததாம்.
                  குற்றாலக் கவிராயரின் இலக்கியம் அதனை சுட்டிக்காட்டுகிறது. மேலும் அருவிகளில் குளிப்பதால் மூலிகைகளின் குணங்கள் மூளை பாதிப்பால் மன நலம் குன்றியவர்களையும் குணமாக்குகிறது.   அதன் காரணமாகவே இங்கு மனநல வைத்தியசாலைகளில் பலர் தங்கி அருவிக்குளியல் நடத்துவது தொடர்ந்த வண்ணமாக இருக்கிறது.
                  மேலும் அருவிகளில் குளிக்கவருபவர்கள் இங்கு விரும்பி ஆயில் மாஜாஜ் செய்து கொள்ளுகின்றனர். இதற்கென பல ஆயில் மஜாஜ் கூடங்களில் திறமையான மஜாஜ் பணியாளர்கள் பணியாற்றிவருகிள்றார்கள். இந்த மஜாஜ் மூலம் உடம்பின் உஷ்ணம் தணிவதோடு ஆயுர்வேத தைலங்கள் மயிர்க்கணுக்களில் உடம்பின் உள்ளே செல்வதால் உடல் புத்துணர்ச்சியும் அடைகிறது. 
 பல் முளைக்காத பாப்பா முதல் பல் உதிர்ந்து போன பாட்டைய்யா வரையிலானவர்கள் ஆபத்தின்றி அருவிக்குளியல் நடத்தும் பாதுகாப்பான அருவிகளின் நகரம் குற்றாலம் மட்டுமே.
                ஆண்கள் பெண்கள் தனித்தனியாக அருவிக்குளியல் போடுவதற்கு வசதியான ஏற்பாடுனகளை டவுண்ஷிப் நிர்வாகம் செய்திருப்பதால் இரவு பகல் 24 மணிநேரமும் சுற்றுலாப்பணிகள் அச்ச மின்றி குளியல் போடுகிறார்கள்.  அதன் காரணமாகத்தான் குற்றாலம் ஏழைகளின் ஊட்டி என பெருமையாகப் பேசப்படுகிறது.
 
               தனியாகவும்,குடும்பத்தோடு தங்குவதற்கு வசதியான காட்டேஜ்கள்,ரிசார்ட்கள் பெருகியதோடு மாலையில் பொழுது போக்கிற்காக கலையரங்கில் கலைநிகழ்ச்சிகளும் களைகட்டுகின்றன. உழைப்பு உழைப்பு, சிந்தனை டென்ஷன் வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு குற்றாலம் அருமையான ரிலாக்ஸ் ஸ்பாட் என்பது அனுபவசாலிகளின் மறுக்கமுடியாத கருத்து.
வழித்தடம் :
                 திருநெல்வேலியிருந்து தென்காசி வழியாக 50கிலோ மீட்டர் தொலைவு கடந்து தென்காசியை ஒட்டி 5கிலோ மீட்டர் பக்கமுள்ள குற்றாலத்தை சிறப்புவாகனங்கள் மூலம் ஒருமணி நேரத்திலும், பேருந்துகளின் மூலமாக ஒன்றரை மணி நேரத்தில் அடைந்து விடலாம்.
மதுரையிருந்து வருவதென்றால் கல்லுப்பட்டி ராஜபாளையம் கடையநல்லூர் வழியாக தென்காசி மார்க்கமாக குற்றாலம் சென்று விடலாம்.                                                                         

No comments:

Post a Comment